2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

தடுகம் ஓயாவில் தோணி கவிழ்ந்ததில் இரு இளைஞர்கள் மரணம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 17 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


சீதுவை தண்டுகம் ஓயாவில் தோணியொன்று கவிழ்ந்ததில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை மாலை உயிரிழந்த மேற்படி இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்ட நிலையில், பிரேத பரசோதனைகளின் பின்னர் அவை இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு களப்புப் பகுதிக்கு அண்மித்ததாக உள்ள கடோலான தாவரங்களையும் காட்சிகளையும் பார்வையிடுவதற்காக சென்ற போதே இவர்கள் இருவரும் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர். அவர்களது சடலங்கள் சுழியோடிகள் மூலமாக நேற்று மாலை மீட்கப்பட்டன.

பள்ளியவத்த, அக்கரகம,கொடகமுவ பிரதேசத்தை சேர்ந்த ரொசேன் சர்வந்த(28 வயது), ஜாஎல, கனுவன பிரதேசத்தை சேர்ந்த மலிந்த விக்ரம சுரேந்திர (24 வயது) ஆகியோரே இச்சம்பவத்தில் மரணமானவர்களாவர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X