2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பிரதம நீதியரசருக்காக சட்டத்தரணிகள் ஒன்றுகூடல்

Super User   / 2012 நவம்பர் 22 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஒலிந்தி ஜயசுந்தர)

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு முன் ஆஜராக இன்று வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் செல்லும்போது ஆறு நிறுவனங்களின் தலைமையில் சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே கூடவுள்ளனர்.

பிரதம நீதியரசர் காலை 10 மணியளவில் நாடாளுமன்றம் செல்வதற்கு முன்னர் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு வெளியே நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் கூடுவர் ஜனநாயகத்திற்கான சிவில் இயக்க சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இது அரசியல் நோக்கத்திலான ஒரு செயன்முறையாகும். அத்துடன் இது அநீதியானதும் அரசியல் சட்டத்திற்கு முரணானதுமாகும். நீதிமன்ற தீர்ப்புக்களை தமக்கு சாதகமாக இருப்பதை உறுதி செய்யவே இந்த குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டது என ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் இயக்க உறுப்பினர் ஜே.சி.வெலியமுன தெரிவித்தார்.

சிவில் குழுக்கள், தொழிற் சங்கங்கள், மதகுருமார் மற்றும் சட்டத்தரணிகள் உட்பட 70 நிறுவனங்கள் இன்று சந்திக்கவுள்ளது என மதுலுவாவெ சோபித தேரர் தலைமையிலான சமூக நீதிக்கான இயக்கம் தெரிவித்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .