2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சிங்கள-முஸ்லிம் உறவுகளை சீர்குலைக்க முயற்சி: விபஸ்சி தேரர்

Super User   / 2013 மார்ச் 10 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-இ. அம்மார்


பல நூற்றாண்டு காலமாக சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவி வந்த மிக நெருக்கமான உறவை சீர் குலைப்பதில் ஈடுபட்டு வருவது மிகக் கவலைக்குரிய விடயமாகும் என்று பெல்பொல விபஸ்சி அமைப்பின்   தலைவர் பெல்பொல விபஸ்சி தேரர் தெரிவித்தார்.

இந்த தீய முயற்சியில் வங்குரோத்துக்குள்ளாக்கபட்ட சிலர் ஈடுபட்டாலும் இந்த நாட்டின் முக்கியமான பௌத்த மதத்தலைவர்கள் இடமளிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெல்பொல விபஸ்சி அமைப்பின்   தலைவர் பெல்பொல விபஸ்சி தேரருக்கும் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என். எம். அமீன் தலைமையில் முஸ்லிம் தூதுக்குழுவொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த சந்திப்பு பொரல்லை ஸ்ரீ சுதர்ணாராராமய விஹாரையில் நடைபெற்றது இந்த சந்திப்பில் குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் கலந்து கொண்டார்.

சமீப காலமாக நாட்டில் முஸ்லிம்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள இனவாதப் பிரச்சினை சம்மந்தமாகவும் நீண்ட காலமாக இருந்து வரும் சிங்கள முஸ்லிம் மக்களின் நல்லெண்ண உறவுகள் பாதிக்கப்பட்டு வரும் நிலை தொடர்பாகவும் தூதுக்குழுவினால் எடுத்துரைக்கப்பட்டது.

வெல்பொல விபஸ்சி அமைப்பின் பணிப்பாளர் அப்துல்லா ஏற்பாடு செய்திருந்தார். இந்தச் சந்திப்பின் போது பெல்பொல விபஸ்சி தேரர் மேலும் தெரிவிக்கையில்,

"அனைத்து ஜீவராசிகளும் நலன்பேண வேண்டும் என்று புத்தபிரான் பௌத்தர்களுக்கு மட்டுமல்ல முழு ஜீவராசிகளுக்கும் நலனாகவே போதனை செய்தார். இன்று இந்த நாட்டின் பௌத்த பிக்குகள் சொல்வது போல் பௌத்தர்களுக்கு மட்டும் புத்தபிரானின் போதனைகள் அமையவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


எங்களுக்கு நன்கு புலப்படக் கூடிய நிகழ்வுகள் உள்ளன. பௌத்தர்களின் விசேட நினைவு கூறப்படும் அன்னதான விசாக் நிகழ்வுகளின் போது அல்லது தோரணங்களின் போது மொஹிதீன் பேக் அவர்களினால் பாடப்படும் புத்தம் சரணம் கச்சாமி என்ற பாடலே பாடப்படுகின்றது.

சாதாரண முஸ்லிம் சிங்கள ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டு என்று கூறுவதற்கு இது போதுமானதாகும். நாங்கள் யாராக இருந்தாலும் எங்கள் எல்லோரினது உடம்பிலும் ஓடுவது ஒரே இரத்தமாகும். சிங்கள பௌத்த என்று ஒரு இனம் இல்லை. பாலி மொழியில்தான் புத்தபிரானின் மொழியாக இருந்தது.

ஆகையினால் தேவையில்லாத பிரச்சினைகளை தூண்டுதற்கோ இந்த நாட்டின் அமைதியை சீர்குலைப்பதற்கோ நாங்கள் இடமளிக்க மாட்டோம். முஸ்லிம்கள் இந்தப் பிரச்சினையைப் பெரிது படுத்தாது இருப்பது முக்கிய கடமையாகும்" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .