2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மாடியிலிருந்து தள்ள முன் யுவதி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் : சாட்சியம்

Super User   / 2013 மே 07 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான் 

ஆடை தொழிற்சாலையுவதி  வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்த கீழே தள்ளப்படுவதற்கு முன்னர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று ராகமை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சாட்சியம் அளித்துள்ளார்.

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வந்த இளம் ஆடை தொழிற்சாலை யுவதியான  சமிளா திசாநாயக்க கொலை வழக்கு நீர்கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே வைத்திய அதிகாரி மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.

இச்சம்பவம் தொடர்பான குறித்த வைத்திய சாலையில் கடமையாற்றிய வைத்தியரான இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸ என்பர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிகிச்சைக்காக வந்த யுவதியை சந்தேக நபரான  வைத்தியர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர், வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகமை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரியன்ஜி பெரேரா நீதிமன்றில் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், 
யுவதியின் சடலத்தில் 67 காயங்கள் இருந்தன. அவரது கழுத்து நெறிக்கபட்ட விரல் அடையாளங்களும் காணப்பட்டன.

யுவதியின் உள் பாவாடையில் 20 சென்றி மீற்றர் நீளமான இரத்தக் கறை காணப்பட்டது. அத்துடன் யுவதியின்  உள்ளாடை அவரது உடம்பில் காணப்படவில்லை. அது மட்டுமன்றி  அவரது முதுகுப் பகுதியில் சிராப்புக்காயங்களும் இருந்தன என சாட்சியமளித்தார். இந்த வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO. Tuesday, 07 May 2013 02:05 PM

    முதலில் இவர் உண்மையான வைத்தியரா அல்லது போலி வைத்தியரா என்றும், உண்மையான வைத்தியர் என்றால் மனநோய் பிடித்துள்ளதா என்று பரிசோதிக்கவும்.

    Reply : 0       0

    D W K David Wednesday, 08 May 2013 03:24 AM

    தன்னை வைத்தியர் என்று சொல்லிக்கொள்ளும் இந்த மிருகம்
    சமுதாயத்திலிருந்து அகற்றப்பட வேண்டியவன்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .