2025 ஜூன் 23, திங்கட்கிழமை

'ராவணா சக்தி' சர்வதேச கலைத்துறைக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது: ராம்

Kanagaraj   / 2013 மே 13 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்தியாவின் பிரபல நடிகர்கள் நடித்த சினிமா படங்களை இலங்கையில் திரையிடுவதற்கு அனுமதிக்கக்கூடாதென்றும் அதனையும் மீறி படங்கள் திரையிடப்பட்டால் திரையரங்குகள் முற்றுகையிடப்படும் என்றும் 'ராவணா சக்தி' அமைப்பினரால் விடுக்கப்படும் அச்சுறுத்தலானது சர்வதேச கலைத்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சி.வை.பி ராம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்திய நடிகர்களான கமல்ஹாசன்,ரஜனிகாந்த்,விஜய் மற்றும் சரத்குமார் உட்பட தென்னிந்தியாவின் பிரபலநடிகர்களின் திரைப்படங்களை இலங்கையில் திரையிடக்கூடாது என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையானது கேலிக்குரிய விடயமாகும்.

கலைத்துறை அரசியலுக்கு அப்பாற்பட்டது. தமிழ்,முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி பல்லாயிரக்கணக்கான சிங்கள ரசிகர்களும் தென்னிந்திய திரைப்படங்களை விரும்பி பார்க்கின்றனர்.

'ராவணா சக்தி' அமைப்பின் இந்த நடவடிக்கையினால் இலங்கை அரசுக்கு கிடைக்கும் பெருமளவு வருமானத்தினை அரசாங்கம் இழக்கவேண்டிய நிலை ஏற்படும்.

தென்னிந்திய கலைஞர்களின் எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிராக இலங்கைக் கலைஞர்களும் அண்மையில் தமது எதிர்ப்பை சாத்வீகமான முறையில் வெளியிட்டிருந்தனர். அது கலைத்துறை சார்ந்த விடயமாகும் என்பதுடன் இவ்வாறான விடயங்களை அரசியல் மயப்படுத்தக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராவணா சக்தி அமைப்பின் இந்த நடவடிக்கையானது வெறுமமே அரசியல் உள்நோக்கம் கொண்ட கேலிக்குரிய விடயமாகும்.
ராவணா சக்தியின் இவ்வாறான நடவடிக்கையை முளையிலேயே கிள்ளியெறிய அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • mashooth Tuesday, 14 May 2013 04:31 AM

    Evaikal payankarawatha seyal illai. yen ethu ILankain kalachcharam.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .