2026 பெப்ரவரி 18, புதன்கிழமை

முப்படை வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 மே 31 , மு.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இஸட்.ஷாஜஹான்


ஆங்கில மொழிப் பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த முப்படை வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது

முப்படைகளையும் சேர்ந்த வீரர்களுக்காக,  தேசிய மாணவர் படையணி அரச மொழிகள் திணைக்களத்துடன் இணைந்து 2012 ஆம் ஆண்டு ஆங்கில மொழிப் பாடநெறியை நடத்தியது.

இக்கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்திசெய்தவர்களுக்கே இவ்வாறு சான்றிதழ்கள் தேசிய மாணவர் படையணியின் தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .