2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பெண் பித்தனுக்கு பிணை

Kanagaraj   / 2013 ஜூலை 18 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணமான பெண்ணை ஏமாற்றி அவரிடமிருந்து ஐந்தரை இலட்சம் ரூபாவை கப்பமாக பெற்றுக்கொண்டதாக கூறப்படும் ஒருவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரபிணைகள் மற்றும் பலத்த நிபந்தனைகளுடனேயே அவர் பிணையில் விடுதலைச்செய்யுமாறு களுத்துறை மேலதிக நீதவான் அயேஷா அபாதீன் உத்தரவிட்டுள்ளார்.

பேருவளையைச்சேர்ந்த வலத்தர எம்.ஏ.நந்தன பிரசன்ன (வயது 42) என்பவரே இவ்வாறு பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உன் கணவன் மற்றொரு பெண்ணுடன் ஹோட்டலில் இருப்பதாக கூறி குறித்த பெண்ணை சந்தேகநபர் ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

ஹோட்டலின் வரவேற்பரையில் வைத்து  பெண்ணின் அடையாள அட்டையை பெற்றுக்கொண்ட சந்தேகநபர், தன்னுடைய அடையாள அட்டையையும் கொடுத்து ஹோட்டலில் அறையொன்றை பதிவு செய்துள்ளார்.

பெண்ணை அந்த அறையில் கொஞ்சநேரம் இருக்குமாறும் கணவன் இருக்கும் அறையை அறிந்துக்கொண்டு வந்து அழைத்துசெல்வதாக அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.

களைப்பிலிருந்த பெண் கட்டிலில் படுத்திருந்துள்ளார். திடீரென  அறைக்குள் நுழைந்து சந்தேகநபர் கட்டிலில் படுத்திருந்த குறித்த பெண்ணை படம்பிடித்துக்கொண்டுள்ளார்.

அந்த படத்தை வைத்துக்கொண்டு திருமணமான பெண்ணை ஏமாற்றி அவ்வப்போது பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்டதுடன் அந்த பெண்ணை ஹோட்டல்களுக்கு அழைத்துச்சென்று துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தியுள்ளார்.

திருமணமான பெண்ணை ஏமாற்றி பெற்றுக்கொண்ட சுமார் ஐந்தரை  இலட்சம் ரூபாவையும் குறித்த நபர் ஹோட்டல் செலவிற்கே பயன்படுத்தி கொண்டதாகவும் இவ்வாறு பலரை குறித்த நபர் ஏமாற்றியுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

You May Also Like

  Comments - 0

  • AMBI. Thursday, 18 July 2013 09:21 AM

    அந்த பெண் நடந்தது வேறு, நீதிமன்றத்தில் சொன்னது வேறு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .