2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேச இளைஞர் தின நிகழ்வு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இசெட்.ஷாஜஹான்       


சர்வதேச இளைஞர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் நீர்கொழும்பு தளுபத்தை வாலிபக் குற்றவாளிகள் சிர்த்திருத்த நிலையத்தில் சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்ரசிறி கஜதீர, இளைஞர் விவகார திறன்கள் அமைச்சர் டளஸ் அலகப்பெரும, இளைஞர் விவகார திறன் அமைச்சின் செயலாளர் கே.ஏ.திலகரத்ன, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், அமைச்சின் அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை யூத் என்பன தளுபத்தை வாலிபக் குற்றவாளிகள் சிர்த்திருத்த நிலையத்துடன் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிகழ்வில் சர்வ சமய நிகழ்வு, இசை நிகழ்ச்சி, உளவியல் மேம்பாட்டு நிகழ்ச்சி, கிரிக்கட் போட்டி உட்பட பல்வேறு கலை நிகழவுகள் இடம்பெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .