2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பில் தேசிய மாநாடு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ.ஹுஸைன்


'நல்லிணக்கத்துக்கான மக்களின் முன்னுரிமைகளும் சிவில் சமூகங்களின் வகிபாகமும்' எனும் தொனிபொருளில் தேசிய மாநாடு இன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.

வடமாகாணம், கிழக்கு மாகாணம் உட்பட இலங்கையின் நாலா புறங்களிலுமிருந்தும் தெரிவு செய்யப்பட்டு விழிப்புணர்வூட்டப்பட்ட பங்கு பற்றுநர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உள்நாட்டு வெளிநாட்டுப் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் என பெரும் எண்ணிக்கையானோர்  இதில் கலந்துகொண்டார்கள்.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, 'நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் சிவில் சமூகத்தின் வகிபாகத்தைப் பாராட்டல்' எனும் தலைப்பிலும்,

அனைத்து வகையான பாரபட்சம் மற்றும் இனக்குரோதத்திற்கு எதிரான சர்வதேச முன்னணியின் தலைவர் கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ 'கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும், சிவில் சமூகம் எதிர்நோக்கிய சவால்களும்' எனும் தலைப்பிலும்,

தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா 'நல்லிணக்கத்திற்கான மக்களின் முன்னுரிமைகள், மாவட்ட நிகழ்வுகளின் பின்னூட்டல்கள்' எனும் தலைப்பிலும்,

சமாதானமும் சமூகப் பணியும் நிறுவனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரீ. தயாபரன் ஆகியோரும் உரையாற்றினர்.
தேசிய சமாதானப் பேரவையுடன்இணைந்து தன்னார்வ சேவைகள் என்கின்ற அமைப்பு இந்த தேசிய மட்டக் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.

ஐரோப்பிய ஒன்றியம்இந்த தேசிய கலந்துரையாடலுக்கு அனுசரணை வழங்கியிருந்தது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .