2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கிராண்பாஸ், வெலிவேரிய சம்பங்கள் ; ஐரோப்பிய ஒன்றியம் அக்கறை

Super User   / 2013 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு -13 கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் மற்றும் வெலிவேரிய சம்பவம் ஆகியன தொடர்பில் கவனம் செலுத்துவதாக கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"மூன்று பேர் கொல்லப்பட்ட வெலிவேரிய தாக்குதல், கிராண்பாஸ் பள்ளிவாசல் உட்பட நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள் தாக்கப்படுவது குறித்து கவனம் செலுத்தி வருகின்றோம். இது தொடர்பாக துரித விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும்" எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளின் இணக்கத்துடன் கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .