2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யுவதியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி: உடற் பயிற்சி நிலைய உரிமையாளர் கைது

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 11 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்  

உடற் பயிற்சி நிலையத்திற்கு வேலைக்கு சென்ற யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற அந்த உடற்பயிற்சி நிலையத்தின்  உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பிலுள்ள  உடற் பயிற்சி நிலையமொன்றின்  உரிமையாளரே சந்தேகத்தின் பேரில் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியொருவரையே அவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு முயன்றுள்ளார்.
குறித்த நிலையத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும் 15 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே    குறித்த யுவதி நேற்று பிற்பகல் 2 மணியளவில் அந்த நிலையத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

வேலைக்கு சென்ற முதல்நாளே சந்தேக நபர் யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து தப்பியோடி வந்த யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டையடுத்தே , நீர்கொழும்பு போலவத்தை பகுதியைச்சேர்ந்த நபரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .