2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மோதரையில் மூவர் புதையுண்டனர்

Super User   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, மோதரை பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை மண் திட்டு சரிந்தமையினால் மூவர் புதையுண்டுள்ளனர்.

இதில் புதையுண்ட இருவர் காப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றொருவரை மீட்கும் நடவடிக்கையில் பொதுமக்களும் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

சீன நிறுவனமொன்றினால் மோதரை, எலிஹவுஸ் பார்க் பகுதியில் நிர்மாணிக்கப்படுகின்ற நீர் சுத்திகரிப்பு தாங்கிக்கான குழியொன்றை அகழ்ந்து கொண்டிருந்த போதே குழிக்குள் மண்திட்டு சரிந்து விழுந்துள்ளது.

மண்திட்டுடன் பாரிய கற்பாறையும் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதையுண்ட மூவரில் இருவர் உடனடியாக காப்பாற்றப்பட்டதுடன் மற்றையவர் 1.45 மணியளவில் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த மூவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .