2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

லலித் பியும் பெரேரவிற்கு தலைசிறந்த இளைஞருக்கான விருது

Super User   / 2013 ஒக்டோபர் 01 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தலைசிறந்த 10 இளைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களுக்காக பாடுபடும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் லலித் பியும் பெரேரவிற்கும் இந்த விருது கிடைக்கப் பெற்றுள்ளது.

அரசியல், சட்டம் மற்றும் பொது நிர்வாகம் ஆகிய துறைகளுக்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கனிஷ்ட சர்வதேச மன்றத்தினால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


இவருக்கான விருது பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரேங்கினால் வழங்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு ரோயல் கல்லூரி மாணவரான இவர் சட்டத்தரணியாவார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான விஜேதாஸ ராஜபக்ஷ, அலி ஸப்ரி, பைசர் முஸ்தபா, அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன ஆகியோர் இந்த விருதுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .