2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நிர்வாணப்படத்தை வெளியிடுவதாக அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்       

தனது கள்ளக் காதலியை தாக்கியதுடன், அவரை நிர்வாணப்படம் எடுத்து இணையத்தளத்தில் வெளியிடப் போவதாகக் கூறி அச்சுறுத்தியதாகக் கூறப்படும் நபரை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி.அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஹார்ட்வெயார் கடையை நடத்தி வரும் 26 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தளுபத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய திருமணமானவரான இந்த வழக்கின் முறைப்பாட்டாளரின்  கணவர் வெளிநாடொன்றில் தொழில் செய்பவராவார்.

சந்தேக நபருக்கும் முறைப்பாட்டாளருக்குமிடையில் கடந்த 5 வருடங்களாக இரகசிய தொடர்பு இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இந்த நிலையில், முறைப்பாட்டாளருக்கு வேறு சிலருடன் இரகசியத் தொடர்பு இருப்பதாக கருதிய சந்தேக நபர், அப்பெண்ணை தனது கடையில் உள்ள களஞ்சியசாலைக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து தாக்கியதுடன், அப்பெண்ணை நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்து இணையத்தளத்தில் வெளியிடப் போவதாகவும்  அச்சசுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண், நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இதனைத் தொடர்ந்து  சந்தேக நபர்  கைதுசெய்யப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .