2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வடிகான்கள் இல்லாததால் வெள்ளத்தில் மூழ்கும் பசியவத்தை பிரதேசதம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இஸட்.ஷாஜஹான்       


நீர்கொழும்பு – பிட்டிபனை - ஜாஎல பிரதான வீதியில் வடிகான்கள் அமைக்கப்;படாததன் காரணமாக சிறிய மழை பெய்தாலும் பிரதேசம் நீரில் மூழ்குவதாகவும் இதனால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி பகுதியில், கொங்ரீட் இடப்பட்டு வீதி விஸ்தரிப்பு இடம்பெற்றுள்ள போதும் வடிகான்கள் அமைக்கப்படவில்லை.

இதனால், வீதியோரமாகவுள்ள வீடுகள், பாடசாலைகள், நிறுவனங்கள், கடைகள், மைதானம் போன்ற இடங்களில் காணிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் இதன்காரணமாக பெரும் அசளகரியங்களை எதிர்நோக்குவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

பிட்டிபனை, பசியவத்தை - அளுத்கூருவ பிரதேசம் இதன் காரணமாக அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பசியவத்தை சாந்த பீற்றர் வித்தியாலயத்தில் மழைநீர் தேங்கி நிற்பதன் காரணமாக மாணவர்களும் ஆசிரியர்களும் அதிகளவு பாதிக்கப்டுவதாகவும் பிரதேசவாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

எனவே இப்பிரதேசத்தில் வடிகான் அமைக்கும் நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .