2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பட்டாசு தொழிற்சாலை தீ: ஒருவர் பலி

Kanagaraj   / 2013 நவம்பர் 28 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு, கிம்புலாபிட்டியவிலுள்ள  பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிம்புலாபிட்டி கட்டியவல வீதியைச் சேர்ந்த சமிந் பெர்னாந்து என்பவரே (28 வயது) உடல் கருகி பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கிம்புலாபிட்டியவில் உள்ள 'விதுரங்கி' பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலையில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தொழிற்சாலையின் உரிமையாளரான எரிக் பெர்னாந்துவின்  மகனே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

மல்வெடி என்ற பட்டாசு தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் வெடி மருந்தில் ஏற்பட்ட தாக்கமே திடீரென பட்டாசுக்கள் தீப்பற்ற காரணமாக இருந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தினால், நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டத்திற்காக தயாரிக்கப்பட்டு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த  பல ஆயிரக்கணக்கான ரூபா பெறுமதியான பல்வேறு வகை பட்டாசுக்கள் வெடித்து நாசமாகியுள்ளன. அத்துடன் களஞ்சியசாலைக்கும் பாரிய சேதமும் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் பலியானவரின் சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .