2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

52 மில்லியன் ரூபா செலவில் டெங்கு வார்ட் திறப்பு

Kogilavani   / 2013 ஜூலை 15 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இஸட்.ஷாஜஹான்   
    

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டு வந்த டெங்கு வாரட் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

52 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இவ் வார்டினை இன்று முற்பகல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன, மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல்மாகாண அமைச்சர்களான நிமல்லான்ஸா, ஜகத் அங்ககே, நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சணி பெர்னாந்து புல்லே   உட்பட பலர் கலந்துகொண்டனர்.

'டெங்கு மற்றும் டெங்கு இரத்தப் பெருக்கு காய்ச்சல் மருத்துவ மேலாண்மை மையம்' என்ற பெயரில் திறக்கப்பட்ட இவ் வார்டின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துப் பிழைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .