2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

அபராத தொகையை செலுத்தியவர் மயங்கி விழுந்தார்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 20 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

டெங்கு பரவக்கூடிய சூழலை வைத்திருந்த 7 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.கருணாகரன், இன்று (20) உத்தரவிட்டார்.

தாவடிப் பகுதியில் டெங்கு பரவ கூடிய சூழலை வைத்திருந்த 7 பேருக்கு எதிராக, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, திங்கட்கிழமை (20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே 7 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார். அபராதத் தொகையைச் செலுத்தி விட்டு வெளியே வந்த ஒருவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவியளித்து அனுப்பி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X