Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 04 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் இருந்தபோது குற்ற செயல்கள் குறைவாக இருந்தது. அந்த ஆதங்கத்தில் இராஜாங்க அமைச்சர் அவ்வாறு கூறி இருக்கலாம் என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்.மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினருமான வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, மகளிர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்ட போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தற்போது குற்ற செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. போதைப்பொருள் கடத்தல்கள், வாள் வெட்டுச் சம்பவங்கள், வன்புணர்வுகள் அதிகரித்துள்ளன.
“விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் இருந்தபோது இவ்வாறான குற்ற செயல்கள் இடம்பெறவில்லை. அவர்களின் ஆளுகையின் போது யாழ்ப்பணத்தில் வாழ்ந்த அவர், அக்கால பகுதியில் இருந்தது போன்று தற்போது இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு ஆதங்கத்தில் அவ்வாறு தெரிவித்து இருக்கலாம்.
“விடுதலைப்புலிகளை வைத்து அரசியல் செய்யவேண்டிய தேவை பலருக்கும் உள்ளது. அது தெற்கில் உள்ளவர்களுக்குதான் உள்ளது. அதனை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
9 minute ago
20 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
2 hours ago
2 hours ago