2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஆலயத்தில் திருடிய இருவருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

ஆவரங்கால் கண்ணாரையம்மன் இராஜராஜேஸ்வரி ஆலயத்தில்,  புதிதாக தாயாரிக்கப்படும் தேர் வேலைப்பாடுகளுக்கென  வைக்கப்பட்டிருந்த மரக்குற்றிகளை திருடிய மூவரில், இருவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கே.ஜீவராணி சனிக்கிழமை (17) உத்தரவிட்டார்.

அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான 17 வயது சிறுவனை, சான்றுபெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் விடுவிக்குமாறு பொலிஸாருக்கு பணித்தார்.

கடந்த புதன்கிழமை (14) படி ரக வாகனத்தில் கோயில் வளாகத்துக்குச் சென்ற குறித்த மூவரும், அங்கு வைக்கபட்டிருந்த விலையுயர்ந்த மரகுற்றிகளை திருடியிருந்தனர்.

இதனை அவதானித்த அப்பகுதி கடை உரிமையாளர், வாகன இலக்கத்தை குறித்து வைத்திருந்து, அது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார், திருடிய பொருட்களை மீட்டதுடன், சந்தேக நபர்கள் மூவரை வெள்ளிக்கிழமை (16) புன்னாலைக்கட்டுவன் மத்தலோடை பகுதியில் வைத்து கைது செய்திருந்தனர்.

இவர்களை சனிக்கிழமை (17) நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய  போதே நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X