எஸ்.என். நிபோஜன் / 2018 மே 05 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜிதா
சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றவளைப்பின்போது, ஆவாக்குழுவைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் நேற்று (04) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், கைதடி, நுணாவில், வவுனியா பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்நு 4 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுன்னாகம் பகுதியில் வாள் வெட்டை மேற்கொள்வதற்கு எத்தணித்த போதே, குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் பல வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், கைதுசெய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
7 minute ago
36 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
36 minute ago
38 minute ago
46 minute ago