2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஆவா குழுவைச் சேர்ந்த மேலும் அறுவர் கைது

Editorial   / 2017 நவம்பர் 30 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன்

கொழும்பில் தலை​மறைவாகியிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த மூவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நேற்று (29) இரவு, மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும் கோண்டாவில், கொக்குவில், நல்லூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என, யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, ஆவா குழுவைச் சேர்ந்த மூவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ள ஆறு சந்தேகநபர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், அவர்களிடம் இருந்து பல தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பியகமயிலும் ஆவா குழுவைச் சேர்ந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்படுகின்றது.

இதேவேளை, மானிப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், ஆவாக்குழுவைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை, மானிப்பாய் பகுதியில் வைத்து நேற்று (29) கைது செய்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நாலக்க ஜெயவீர தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞன், மாசியப்பிட்டி - சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என, பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

குறித்த இளைஞன், கடந்த 14ஆம் திகதி சங்குவேலிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் மற்றும் கோண்டாவில் பகுதி, ஐந்து சந்திப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புபட்டவர் என விசாரணையில் தெரியவந்துள்ளதென, பொலிஸ் தரப்புத் தெரிவிக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X