2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்களின் மறியல் நீடிப்பு

Editorial   / 2017 நவம்பர் 07 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

 

கடந்த மாதம் வெவ்வேறு தினங்களில் கைதான இந்திய மீனவர்கள் 35 பேரையும், எதிர்வரும் 21ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்றுறை நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று(07) உத்தரவிட்டார்.

குறித்த மீனவர்களை விடுதலை செய்வதற்குரிய சட்டஆலோசணை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து கிடைக்கப்பெற்றிருக்கவில்லை. இதையடுத்து, இது தொடர்பில் கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள் நீதவானின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து வழக்கை ஆராய்ந்த நீதவான், விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.

இதேவேளை, நெடுந்தீவுக் கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரை, இன்று (07) அதிகாலை, காரைநகர் கடற்படையினர் கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளனர் என, கடற்றொழில் நீரியல்வளத்துறையின் யாழ். மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

கைதான நால்வரும், இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .