2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

Princiya Dixci   / 2022 ஜூலை 04 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று (03) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள், தமிழ்நாடு மாநிலம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதியச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர். 

இவர்கள் ஒரு விசைப்படகுடன் பருத்தித்துறை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X