2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் அறுவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் அறுவரையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் இராமலிங்கம் சபேசன், ஞாயிற்றுக்கிழமை (20) உத்தரவிட்டார்.

இலங்கை கடற்படையினரால் சனிக்கிழமை (19) கைது செய்யப்பட்டிருந்த இராமேஸ்வரம் பகுதியைச்சேர்ந்த மீனவர்கள் அறுவரும் காங்கேசன்துறை கடலோர காவல்படையினரால், யாழ். கடற்றொழில் நீரியல்வளதுறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களை, ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய போதே பதில் நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X