2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Gavitha   / 2016 மார்ச் 17 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 3ஆம் திகதி காரைநகருக்கும் காங்கேசன்துறைக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 23ஆம் திகதி திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட மேலதிக நீதிவான் ரீ.கருணாகரன் வியாழக்கிழமை (17) உத்தரவிட்டார்.

தமிழ்நாடு, இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 2 விசைப்படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 8 மீனவர்களும் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் இந்த மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X