Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 02 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர், இன்று வியாழக்கிழமை (02) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடித்துகொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் தமிழகம், புதுக்கோட்டை பகுதியிருந்து விசைப்படகு ஒன்றில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர்களை கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் பா.ரமேஷ் கண்ணா தெரிவித்தார்.
17 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
3 hours ago
3 hours ago