Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 03 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் 14 பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உருத்திரேஸ்வரன் விஜயராணி, செவ்வாய்க்கிழமை (03) உத்தரவிட்டார்.
பருத்தித்துறை கடல் பரப்புக்குள் 2 விசைப்படகுகளுடன் நுழைந்த 15 இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடலோர காவற்படையினர் கைது செய்து, யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்திய மீனவர்களுக்கு எதிராக தவணை முறையில் வழக்கு இடம்பெற்று அவர்கள் தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கைதான 15 இந்திய மீனவர்களில்; இராமசாமி வீரமணி (வயது 50) என்ற மீனவர் புற்றுநோய் காரணமாக கடந்த மாதம் 16ம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
8 hours ago