2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இந்திய மீனவர்கள் மூன்று பேர் கைது

Niroshini   / 2016 மார்ச் 24 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், புதன்கிழமை (23) இரவு 3 இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டிணத்திலிருந்து விசைப்படகொன்றில் வந்த குறித்த இந்திய மீனவர்கள், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X