2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இந்திய றோலர்களின் அத்துமீறலைக் கண்டித்து அறவழிப் போராட்டம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 21 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடபகுதி கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை கண்டித்து வடமாகாண கடற்றொழிலாளர் இணையம், யாழ்.மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனம், யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் ஆகியன இணைந்து புதன்கிழமை (23) அறவழிப் போராட்டம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளன.

பண்ணையில் அமைந்துள்ள யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்திலிருந்து ஆரம்பமாகும் இந்தப் போராட்டம் யாழ்.மாவட்டச் செயலகம் வரையில் ஊர்வலமாகச் சென்று அங்கு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இந்த அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக செவ்வாய்க்கிழமை (22) இரவு தொடக்கம் மறுநாள் புதன்கிழமை (23) வரையில் மீனவர்கள் கடலுக்குச் செல்லக்கூடாது என மேற்படி அமைப்புக்கள் மீனவர்களிடம் கோரியுள்ளன.

அத்துடன், யாழ்.மாவட்டத்திலுள்ள கடைகள், கூட்டுறவுச் சங்கங்கள், நிறுவனங்கள், மீனவர் சங்க சமாசங்கள், மீன கிராமிய அமைப்புக்கள், போக்குவரத்துக் கழகங்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் ஆகியோர் அனைவரும் கறுப்புக்கொடி கட்டத் தங்களை ஆதரவை வழங்க வேண்டும் என மேற்படி அமைப்புக்கள் கோரியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .