2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இறைச்சிக்காக எடுத்த செல்லப்பட்ட ஆமைகள் மீட்பு

George   / 2016 ஜூன் 24 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியிலிருந்து சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக எடுத்த செல்லப்பட்ட 6 ஆமைகள், வியாழக்கிழமை (23) இரவு மீட்கப்பட்டுள்ளதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது குறித்த ஆமைகளை எடுத்து சென்ற நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், எடுத்து செல்லப்பட்ட ஆமைகள் மீட்கப்பட்டன.

குறித்த ஆமைகளை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் ஊடாக வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X