Editorial / 2020 ஜூன் 03 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
இணுவில் – கோண்டாவில் காரைக்கால் பகுதியில், நேற்று (02) இளைஞன் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி, படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு தரப்புக்கு இடையே நீடித்து வந்த மோதல், நேற்று (02) இரவு வாள்வெட்டாக மாறியுள்ளதாக, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
காரைக்காலைச் சேர்ந்த குழு ஒன்று, மற்றொரு குழுவைத் திங்கட்கிழமை (01) தாக்கியுள்ளது. அதற்குப் பழிதீர்க்கும் வகையிலேயே, நேற்று (02) காரைக்காலைச் சேர்ந்த குழு மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதில், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
38 minute ago
43 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
43 minute ago
17 Dec 2025
17 Dec 2025