2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இ.போ.ச தொழிற்சங்கப் போராட்டம் தொடரும்

Editorial   / 2017 நவம்பர் 29 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எம்.றொசாந்த், டி.விஜித்தா  
“இலங்கை போக்குவரத்துச் சபையின் உயரதிகாரிக்கும் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்துக்கும் இடையே, வவுனியாவில் நேற்று நண்பகல் இடம்பெற்ற பேச்சுக்களின் போது, சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை. அதனால், தொழிற்சங்கப் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் தொடரும்” என, வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பிரதான முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடனடியாக இடமாற்றக்கோரி, வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஊழியர்கள் நேற்று  செவ்வாய்கிழமை தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், அரச பஸ் சேவைகள், வடக்கு முழுவதும் இன்று இரண்டாவது நாளாக முடங்கியிருந்தன. இதனால், மாணவர்களும் பொதுமக்களும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

இந்த நிலையில், வடபிராந்திய போக்குவரத்துச்சபை தொழிற்சங்கத்துடன் பேச்சு நடத்த, இலங்கைப் போக்குவரத்துச் சபையின் உயரதிகாரி உள்ளிட்ட குழு, வவுனியாவுக்கு வந்தது. இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுக்கள், இதன்போது இடம்பெற்றன. எனினும், தொழிற்சங்கத்தின் கோரிக்கைக்கு சாதகமான பதிலை கொழும்பு அதிகாரி வழங்கவில்லை என்பதால், தமது போராட்டம் தொடரும் என, தொழிற்சங்கம் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X