2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஈ.பி.டி.பி கட்டுப்பணம் செலுத்தியது

Editorial   / 2017 நவம்பர் 28 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், டி.விஜிதா  

வடக்கில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள ஒரே ஒரு நகரசபையான சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஈழமக்கள் ஜனநாக்க கட்சி (ஈபிடீபி), இன்று (28) கட்டுப்பணம் செலுத்தியது.  

21 உறுப்பினர்களைக் கொண்ட சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிட, யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தினரால் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.  

இதற்கமைய, தாம் போட்டியிடுவதை உறுதிப்படுத்திய ஈபிடீபியினர், யாழ். மாவட்டச் செயலகத்திலுள்ள தேர்தல் திணைக்கள அலுவலகத்தில், மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஏ.அகிலனிடம் கட்டுப்பணத்தை செலுத்தி, வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொண்டனர்.  

இக்கட்சி சார்பில், மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் கட்டுப்பணம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X