2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

உதவி செய்தவர்களும் அரசியல் கைதிகளே: சிவஞானம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியில் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே போராடினார்கள். அவர்களுக்கு உதவி செய்தவர்கள் கைது செய்யப்பட்டால், அவர்களும் அரசியல் கைதிகள் என்ற வகைக்குள்ளேயே உள்ளடங்குவார்கள் என்று, வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள சிறைகளில், அரசியல் கைதிகள் எவரும் இல்லையென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறிய கருத்துக்கு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

'விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களும் அரசியல் கைதிகளாவர். அவ்வாறு இருக்கையில், சிறையில் உள்ளவர்கள் அரசியல் கைதிகள் இல்லை என்று கூறமுடியாது' என்று அவர் கூறினார்.

மேலும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுவிக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X