2025 ஜூலை 21, திங்கட்கிழமை

உயர்பாதுகாப்பு வலயத்தில் 5,710 ஏக்கர் இருக்கின்றன

Niroshini   / 2016 ஜனவரி 04 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் பொதுமக்களுக்குச் சொந்தமான 5 ஆயிரத்து 710 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இருப்பதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன் திங்கட்கிழமை (04) தெரிவித்தார்.

'வலிகாமம் வடக்கில் 5 ஆயிரத்து 500 ஏக்கர்களும் வலிகாமம் கிழக்கில் 210 ஏக்கர்களும் இவ்வாறு விடுவிக்கப்படவேண்டும். விடுவிக்கப்படாத காணிகளில் 38 முகாம்களையும் சேர்ந்த மக்களின் காணிகளும் உள்ளடங்குகின்றன.

முகாம் மக்களின் வாழ்க்கைக்கு 6 மாதகாலத்துக்குள் தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X