Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 15 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - குடத்தனை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள், இன்று (15) அதிகாலை புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர்களைத் தாக்கி, நகை மற்றும் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துத் தப்பிச்சென்றுள்ளனர்.
குடத்தனை பகுதியில் உள்ள வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனின் பெற்றோரின் வீட்டிலேயே, இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று (15) அதிகாலை 12.30 மணியளவில், வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த மாகாண சபை உறுப்பினரின் தந்தை மீது தாக்குதலை மேற்கொண்டு, தாய் அணிந்திருந்த 6 பவுண் நகை மற்றும் உண்டியலில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துள்ளனர்.
அத்துடன், வீட்டில் இருந்த மூன்று அலைபேசிகளையும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் அடித்து நொருக்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில், நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
32 minute ago
43 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
43 minute ago
2 hours ago
2 hours ago