2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கடந்த ஆண்டு இந்திய மீனவர்களின் கைது குறைவு

Sudharshini   / 2016 ஜனவரி 02 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் கைது, 2014 ஆம் ஆண்டை விட 2015 ஆம் ஆண்டு குறைவாகவுள்ளதாக யாழ்;ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைப் உதவிப் பணிப்பாளர் எஸ்.ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.

யாழ்;ப்பாண கடற்பகுதிகளில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 2014 ஆம் ஆண்டு 477 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் 99 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், 2015 ஆம் ஆண்டு 273 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 43 படகுகள் கைப்பற்றப்பட்டன.

2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் விடுவிக்கப்பட்டு, அவர்களின் படகுகளும் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 273 பேரில் 222 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், 51 பேர் தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், அவர்கள் பயன்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களால் கடல் வளமும் அழிக்கப்படுகின்றது என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X