2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கடற்படை படகை மோதிய மீனவர்களுக்கு விளக்கமறியல்

George   / 2015 நவம்பர் 06 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து, உத்துரு கடற்படையினரின் டோறா (சிங்கி) படகை மோதிச் சேதமாக்கியதாக பளைப் பொலிஸாரால், கிளிநொச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் சந்தேகநபர்களான 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எம்.ஐ.வகாப்தீன், வியாழக்கிழமை (05) உத்தரவிட்டார்.

ஏற்கெனவே, எல்லை மீறிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட 10 இந்திய மீனவர்களே இந்த வழக்கிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 27ஆம் திகதி காங்கேசன்துறை கடற்பரப்பில் வெற்றிலைக்கேணி உத்துரு கடற்படை முகாமுக்குச் சொந்தமான டோறாவை, இந்திய மீனவர்களின் றோலர் மோதியதாக கடற்படையினர், பளைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

றோலர் மோதியதால், 2 இலட்சத்து 62 ஆயிரத்து 991 ரூபாய் 61 சதம் நட்டம் ஏற்பட்டுள்ளதாகக்கூறி, கடற்படையினர் முறைப்பாடு பதிவு செய்தனர். முறைப்பாட்டின் பிரகாரம், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பளைப் பொலிஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .