2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கடை உடைத்து திருட்டு

Princiya Dixci   / 2016 ஜூன் 28 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஊர்காவற்றுறை, நாரந்தனை பகுதியிலுள்ள கடையொன்று, இன்று செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை உடைக்கப்பட்டு 13 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பால்மா பெட்டிகள், சோப் வகைகள் மற்றும் பிஸ்கெட் கைப்பற்றுக்கள் என்பன இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

கடையின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X