Freelancer / 2023 பெப்ரவரி 13 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் கணவன் உயிரிழந்த செய்தியை கேட்ட மனைவி தனது உயிரை மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவை சேர்ந்த செல்வதயாளரூபன் நாகராணி (வயது 61) என்பவரே உயிரை மாய்த்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை இவரது கணவரான செல்வதயாளரூபன் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கணவனின் மரண செய்தியை தொலைபேசி ஊடாக கேட்ட மனைவி தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். R
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago