2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கண்ணீர் விட்டழுதார் நீதிபதி இளஞ்செழியன்

எம். றொசாந்த்   / 2017 ஜூலை 23 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் உறவினர்களின் காலில் வீழ்ந்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்  கண்ணீர் விட்டழுதார். 

நல்லூர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல்.நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் ஹேமசந்திர என்பவர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலத்தை, யாழ்.போதனா வைத்தியசாலையில் பொறுப்பேற்பதற்காக, உயிரிழந்தவரின் உறவினர்கள், இன்று யாழ். வந்து இருந்தனர். 

சடலத்தை அடையாளம் காட்டுவதற்காக இன்று யாழ்.போதனா வைத்தியசாலை பிணவறைக்கு, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வந்திருந்தவேளை அங்கு நின்றிருந்த நீதிபதி, உறவினர்களைக் கண்டதும் கதறி அழுதார். அத்துடன் அவர்களின் காலிலும் வீழ்ந்து அழுதார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களின் மனதை உருக்கி இருந்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X