Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செந்தூரன் பிரதீபன்
பாதுகாப்பற்ற கிணற்றடிக்கு அருகில் நின்று விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறுதலாக வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் இன்றுமாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் அராலி மேற்கு வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. செல்வநாதன் டிலக்சன் வயது(1) என்ற சிறுவனே உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த சிறுவன் பக்கத்துவீட்டு சிறுவனுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளதாக கூறப்பட்டது. திடிரென சிறுவனைக் காணாத பெற்றோர் அக்கம் பக்கம் தேடிப்பார்த்தனர் எங்கும் காணாத நிலையில் சிறுவன் பாதுகாப்பற்ற கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் கூறினர்.
சடலம் உடற்கூற்று பரிசோதணைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago