2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

குடும்பஸ்தர் கொலை

Editorial   / 2017 நவம்பர் 25 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜிதா

யாழ். பருத்தித்துறை பகுதியில், உழவு இயந்திரத்தால் மோதி, நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று, இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை - முதலாம் கட்டை பகுதியைச் சேர்ந்த, 3 பிள்ளைகளின் தந்தையான சிதம்பரப்பிள்ளை சிவபாலன் (வயது 48) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், இன்று (25) அதிகாலை 1.45 மணியளவில் அவரது நண்பர்களுடன் மதுபானம் அருந்திக்கொண்டிருந்துள்ளார். இதன்போது ஏற்பட்ட தகராற்றின் பின்னர், அவர் அங்கிருந்துச் சென்ற சமயம், அவரது எதிரியான உழவு இயந்திர சாரதி, உழவு இயந்திரத்தால் அவரை மோதி கொலை செய்துள்ளார்.

இதில், குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில், 43 வயதுடைய உழவு இயந்திரத்தின் சாரதி, பருத்தித்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X