2025 மே 13, செவ்வாய்க்கிழமை

குண்டுகள், வாள்கள் மீட்பு: இளைஞன் கைது

Editorial   / 2020 ஜூன் 03 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து பெற்றோல் குண்டுகளும் வாள்களும் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர், நேற்று (02) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயானம் ஒன்றில் இருந்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர், பெற்றோல் குண்டுகள் இரண்டு, ஐந்து பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட நிலையில் பெற்றோல், வாள் ஒன்று, ஓட்டோ ஒன்று என்பன இராணுவத்தினரால் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட பொருள்கள் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், நேற்று (02) இரவு, இளைஞன் ஒருவரைக் கைதுசெய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X