2025 மே 19, திங்கட்கிழமை

குளத்தில் குளிக்கச் சென்றவர் உயிரிழப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், டி.விஜிதா

யாழில் குளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இராசன் குலேந்திரன் (வயது 34) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (25) மாலை முதல் காணாமல் போயிருந்தார். அவரை இரவு முதல் உறவினர்கள் தேடி வந்த நிலையில், இன்று (26) குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X