Freelancer / 2022 டிசெம்பர் 02 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட பெண் நோயியல், மகப்பேற்றுத்துறை, சத்திரசிகிச்சைத் துறை இணைந்து கருவுறுதல் தொடர்பான விழிப்புணர்வு தினமும், வைத்திய கலாநிதி ரகுராமன், வைத்திய கலாநிதி பாலகோபி இணைந்து எழுதிய குழந்தையின்மை தொடர்பான புத்தக வெளியீடும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கூவர் அரங்கத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
அண்மைக் காலத்தில் குழந்தையின்மை என்பது திருமணமான தம்பதிகளைப் பொறுத்த வரையில் ஒரு சவாலாக இருப்பதுடன், இதனால் பாதிப்படைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
இத்தகைய சந்தர்ப்பங்களை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும்போது அது தொடர்பான விளக்கங்களைப் பெறுவதற்கான போதுமானளவு பொறிமுறைகளும், வழிவகைகளும் நமது சமூகக் கட்டமைப்பில் இருக்கவில்லை.
எனவே இவ்விடயம் தொடர்பாக விழிப்புணர்வை சமூக மட்டங்களில் ஏற்படுத்துவதுடன் சமூக மட்டங்களில் இது தொடர்பான செயற்றிறனை அதிகரிக்கும் நோக்குடனேயே இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்படுகிறது.
23 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
49 minute ago
2 hours ago