2025 ஜூலை 02, புதன்கிழமை

குடும்ப பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

நவராத்திரி பூஜை வழிபாடுகளை முடிந்து இரவு நடந்து சென்ற குடும்ப பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற  புத்தூர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சாரதி ஒருவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பை ஜீவராணி, வெள்ளிக்கிழமை (23) உத்தரவிட்டாhர்.

கடந்த 22ஆம் திகதி இரவு நவராத்திரி பூஜை வழிபாடுகளை முடிந்து வீட்டுக்குச் சென்ற குறித்த பெண்ணை மதுபோதையில் இருந்த சாரதி கட்டிப்பிடித்து வாயை பொத்தியுள்ளார்.

உடனே சுதாகரித்து கொண்டு அபயக்குரல் எழுப்பிய வண்ணம் அப் பெண் ஒடியுள்ளார்.

அபயக்குரலை கேட்டு அப் பகுதிக்கு வந்த இளைஞர் குழு தப்பியோடிய நபரை பிடித்து அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், அன்றையதினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .