Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கி.பகவான்
சாவகச்சேரி, மட்டுவில் வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றின் கிணற்றுக்குள் வியாழக்கிழமை (17) மாலை தவறி விழுந்த மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
சாவகச்சேரி, மட்டுவில் பகுதியைச் சேர்ந்த வேலன் செல்லம்மா (வயது 86) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
திடீர் மரண விசாரணை அதிகாரி சி.சி.இளங்கீரன், விசாரணைகளை மேற்கொண்டதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
32 minute ago