Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் விவசாய நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
'முல்லைத்தீவு மாவட்டங்களின் கீழுள்ள குளங்களின் கீழான காலபோகச் செய்கையானது, தற்போது ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. செய்கையின் போது, விவசாயிகள் விவசாய நடைமுறைகளையும் சட்டதிட்டங்களையும் சரியாகக் கடைப்பிடிக்கவேண்டும்' என்று அவர் கூறினார்.
'கடந்த சிறுபோக நெற்செய்கை காலத்தில் கூடுதலான விதைப்பில் பல விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் கூடுதல் விதைப்பில் ஈடுபடுகின்ற விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் சட்டதிட்டங்களை மதித்து பயிர்ச்செய்கையில் ஈடுபடும்போது, பயிர்ச்செய்கைகளில் தேவையற்ற பிணக்குகள் தவிர்க்கப்படும்' என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
29 Jun 2025
29 Jun 2025